தமிழகமே கலங்கிப் போயிருக்கிறது: வாசன்
சென்னை:
தமிழகத்தில் சென்னை மாநகரில் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன்,
தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதாஎன்ற பெருத்த கேள்வி எழுகிறது.
சென்னை நகரில் தினசரி பல கொள்ளைச் சம்பவங்கள், கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஒருமாதத்தில் 3 பெண்கள் வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும்20 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. இதுதவிர மாணவர்கள் கடத்தல், வெடிகுண்டு புரளி என தமிழகமேகலங்கிப் போயுள்ளது. காவல்துறை மிகுந்த தீவிரத்துடன் இவற்றைத் தடுத்து நிறுத்துவதோடு, மக்கள்நிம்மதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications