குற்றாலத்தில் குளு குளு சீசன்: சாரல் விழா
தென்காசி:
குற்றாலத்தில் சாரல் விழா தொடங்கியுள்ளது.
தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது குளு குளு சூழ்நிலைநிலவுகிறது. சாரலூடன் கூடிய சீசனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகிறார்கள்.
இந் நிலையில் வருடாந்திர சாரல் விழா நேற்று தொடங்கியது. தொழில்துறை அமைச்சர் நைனார்நாகேந்திரன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர்,ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கருப்பசாமி உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.
31ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள்,பரிசுப் போட்டிகள் ஆகியவற்றிற்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
25ம் தேதி நீச்சல் போட்டி, 26ம் தேதி படகுப் போட்டி, 27ம் தேதி சறுக்குப் போட்டி, 29ம் தேதிகோலப் போட்டி, 30ம் தேதி மராத்தான் போட்டி, 31ம் தேதி மலையேறும் போட்டி ஆகியவைநடக்கின்றன.