ஒரே நாளில் 137 வழக்குகள் பதிவு
மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரே நாளில் 137 மனுக்கள் பதிவாகின.
கிளை நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. மாலையில்தான் திறப்பு விழா என்றாலும் கூடகாலை முதலே வழக்குகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் வழக்கறிஞர்கள்மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கினர்.
மாலை வரை ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு உள்ளிட்ட 137 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்பதிவாகின.
இவற்றில் பெரும்பாலான மனுக்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களைச்சேர்ந்தவையாக இருந்தன.
முதல் மனுவை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அன்புராஜ், செல்வராஜ் ஆகியோர் கலப்பட டீத் தூள் விற்றதாக கூறி கைதுசெய்யப்பட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். அவர்களதுதண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தான் அது.












Click it and Unblock the Notifications