முதல் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் முதல் வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதிஎன்.தினகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

கிளை நேற்று மாலை கோலாகலமாக தொடங்கி வைக்கப்பட்டது. விடுமுறை தினமாக இருந்தபோதிலும், தொடக்க நாளில் முதல் வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி விருப்பம்தெரிவித்திருந்ததால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதல் வழக்காக, ஒரு ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்) மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜீவராஜ் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ்போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஜீவராஜ் சார்பில் மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 26ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். மேலும்ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

இந்த முதல் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லஹோட்டி முன்னிலையில் நடந்தது.

முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த மனு ஒரு ரிட் மனுவாகும். ரிட்மனுக்களை விசாரிக்கும் அதிகாரத்தை மதுரை கிளைக்கு தரக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் கூறி வரும் நிலையில், முதல் மனுவே ரிட் மனுவாக அமைந்து குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+