இராக் தீவிரவாதிகளுக்கு இந்தியா கோரிக்கை
டெல்லி:
தங்கள் பிடியில் இருக்கும் மூன்று இந்தியர்களையும் விடுவிக்குமாறு இராக்கிய தீவிரவாதிகளுக்குமத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அஹமத் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாதிகளுடன் இராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் மறைமுகத் தொடர்பைஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. தூதரகத்தில் பணிபுரியும் ஒரு இராக்கியர் மூலமாகதீவிரவாதிகளுடன் இந்தியா ரகசிய பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், இன்று இந்தகோரிக்கையை மத்திய அரசு விடுத்தது.
அமைச்சர் அஹமதின் இந்தக் கோரிக்கை இராக், குவைத், ஓமன் மற்றும் அல்-அரேபியா உள்ளிட்டபல வளைகுடா நாட்டுத் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் மூலம் வெளியிடப்பட்டது.
அதில் பேசிய அஹமத், உங்களிடம் பிடிபட்டுள்ள இந்தியர்கள் அமெரிக்கர்களுக்கு உதவ அங்குவரவில்லை. தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற பிழைப்பு தேடி வந்தவர்கள். இராக்குக்கு படைகளைஅனுப்புவதில்லை என்பதில் மிக உறுதியாக இருக்கும் நாடு இந்தியா.
இராக்குக்காக பல சர்வதேச அரங்குகளில் குரல் எழுப்பிய நாடு இந்தியா. அரேபியர் நலனில்இந்தியாவின் ஆர்வம் உலகறிந்தது. இராக்குக்கு இன்னும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்துசெய்து வருகிறோம். இதனால் அந்த அப்பாவிகளை விடுவித்துவிடுங்கள் என்றார்.
இந் நிலையில் பணயக் கைதியாக உள்ள அந்தர்யாமியின் தந்தை ராமமூர்த்தி, ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் ஆகியோரை சந்தித்துதனது மகனைக் காக்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே கடத்தப்பட்ட திலக் ராஜ், சுக்தியோ சிங், அந்தர்யாமி ஆகியோரை மீட்க தாங்களும்தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அவர்களை இராக்குக்கு அனுப்பிய குவைத்நிறுவனமான கல்ப் லிங்க் டிரானஸ்பேராட் கம்பெனி தெரிவித்துள்ளது.
இந் நிலையில் பலூஜா உள்ளிட்ட நகர்களில் உள்ள பாதிக்கப்பட்ட இராக்கிய குடும்பத்தினருக்குநஷ்ட ஈடு வழங்க வேண்டும், அமெரிக்க, குவைத் சிறைகளில் உள்ள இராக்கியர்களை விடுவிக்கவேண்டும் என அந்தத் தீவிரவாத அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
இதனால், அவர்களை விடுவிப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications