திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை தமிழ் எம்.பி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெங்களூரில் இன்று நடக்கும் உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை தமிழ்எம்.பியான ஈழவேந்தன் சென்னை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பிஅனுப்பப்பட்டார்.

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் இன்று உலகத் தமிழர் பேரவையின் இரண்டாமாண்டு நிறைவு விழாமாநாட்டு நடக்கிறது. இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்க சென்னைஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில், நெடுமாறன் தவிர பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,தென்னாப்பிரிக்கத் தமிழறிஞர் கோவிந்தசாமி, பிரான்ஸ் தமிழறிஞர் அலன் ஆனந்தன், இலங்கைஎம்.பிக்கள் சந்திரசேகரன், செனாதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவை இலங்கை வட கிழக்கு மாகாண எம்.பியான ஈழ வேந்தன் துவக்கி வைப்பதாகஇருந்தது.இதற்காக ஈழவேந்தன் கொழும்பிலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.

விமான நிலையம் வந்திறங்கியவுடன் அவரை விமான நிலைய இமிக்ரேசன் அதிகாரிகள் தடுத்துநிறுத்தினர்.

இந்தியாவுக்குள் நீங்கள் நுழைய அனுமதி இல்லை. எனவே உங்களை இலங்கைக்கு திருப்பிஅனுப்பவுள்ளோம் என்று ஈழவேந்தனிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்துகோபமடைந்த ஈழவேந்தனின் ஆதரவாளர்கள், அதிகாரிகளுடன் வாதாடினர். நெடுநேரம்வாதாடியும் பலன் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து ஈழவேந்தன் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். விடுதலைப் புலிகள்ஆதரவு தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பியான ஈழவேந்தன், இதற்கு முன்பும், கடந்த 2000ம்ஆண்டிலும் இதே போல சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+