அதிமுக அரசு விலக வேண்டும்: கருணாநிதி
சென்னை:
மக்கள் விரோத, ஜனநாயக விரோத அதிமுக அரசு பதவியில் நீடிக்கத் தகுதியில்லை, அதிமுக அரசு பதவி விலகவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத் தொடரை ஒரு வார காலத்திற்கு மட்டுமே நடத்துவது என்ற முடிவைக் கண்டித்து ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டுபேசினார். அப்போது, இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்,விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
சட்டசபையில் தங்களது கருத்துக்களை எழுப்ப மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுங்கட்சியினர் அனுமதி தரவில்லை.இதனால் தான் மக்கள் சபைக்கு வந்திருக்கிறோம். இந்த அரசுக்கு எதிராக மக்கள் பொங்கியெழ வேண்டியகட்டாயதில் உள்ளனர். அது விரைவில் நடக்கும்.
கடந்த ஒரு மாதத்தில் சென்னை நகரில் பல்வேறு கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மக்களைபீதிக்குள்ளாக்கியுள்ளன, சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளன.
அத்தோடு, காவல்துறையினரே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை கடற்கரையில் காவலர்கள்வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள். மதுரையில் நடந்த இரட்டைக் கொலைக்கு இன்ஸ்பெக்டர் ஒருவரே காரணம்என்கிறார்கள்.
இந்த நாசகர அதிமுக ஆட்சியை பதவியில் நீடிக்க விடலாமா? பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமை அதிமுகஅரசுக்கு உள்ளதா? அதிமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
இக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்ஆகியோரும் பங்கேற்றனர்.