கும்பகோணம் சம்பவத்திற்கு மொரீஷியஸ் பிரதமர் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு மொரீஷியஸ் நாட்டு பிரதமர் பால் ரேமண்ட்பெங்கர் இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்தில் 90க்கும்மேற்பட்ட குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்என இரங்கல் செய்தியில், பெங்கர் தெரிவித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications