பாபர் மசூதி இடிப்பு: ராவ் எழுதும் புத்தகம்
பெங்களூர்:
பாபர் மசூதி இடிப்பு குறித்த சில உண்மைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடப் போவதாக முன்னாள் பிரதமர்நரசிம்ம ராவ் கூறியுள்ளார்.
மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் வாழ்க்கைக்குறித்த த இன்சைடர் என்ற புத்தகத்தை ஏற்கனவே ராவ் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தின் கன்னட மொழியாக்கப் பதிப்பு நாளை வெளியிடப்படுகிறது. இதற்காக பெங்களூர் வந்த அவர்நிருபர்களிடம் பேசுகையில்,
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக தனி புத்தகத்தை எழுதியிருக்கிறேன். விரைவில் அது வெளி வரும்.
எனது த இன்சைடர் புத்தகத்தின் அடுத்த பாகம் ஐந்தாறு மாதங்களில் வெளிவரும். அதில் 70, 80களில் நாடுசந்தித்த அரசியல் மாற்றங்கள், அதன் பின்னணி விவரங்கள் குறித்து விரிவாக எழுதப் போகிறேன்.
என் வாழ்க்கை வரலாற்றை எல்லாம் எழுதப் போவதில்லை. நான் அவ்வளவு பெரிய ஆளுமில்லை. நாட்டின்வரலாற்றை, எனக்குத் தெரிந்த அரசியல் பின்னணிகள் குறித்து எழுதப் போகிறேன்.
என்னைப் பற்றி டாகுமென்டரி படம் எடுக்க விரும்புவதாக ஒரு மாணவி வந்தார். பொய் சொல்லி பரபரப்பாகஎதையாவது நான் கிண்டினால் ஒழிய எனது டாகுமென்டரியை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லிதிருப்பி அனுப்பிவிட்டேன் என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications