திமுக மீது திருநாவுக்கரசர் பாய்ச்சல்
கரூர்:
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படதில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகஎம்.பியுமான திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.
கரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக் கூட்டத் தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டதை எதிர்த்து சட்டசபைக்கூட்டத்தையே திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது சரியான செயலல்ல.
எதிர்க் கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதே நல்லது. அத்தகைய ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும். மக்களவைத்தேர்தல் தோல்வி பாஜகவுக்கு ஒரு படிப்பினையே தவிர வீழ்ச்சி அல்ல. அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம் போட்டுக் கொண்டுள்ளன. எதிலும் ஒரே மாதியானநிலைப்பாட்டை அந்தக் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications