"குள்ள" நடிகையைக் கைவிட்ட "குள்ள" ராஜா!
சென்னை:
பேரழகன் படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள குள்ள கற்பகம் என்ற நடிகையை கைவிட்டு விட்டு தலைமறைவாகி விட்டதாகஅவரது கணவர் குள்ள ராஜா என்பவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் குள்ள ராஜா. 3 அடி உயரமே உடைய இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். சிலபடங்களிலும் நடித்துள்ளார். சர்க்கஸிலும் சாகஸம் செய்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் குள்ள கற்பகம் என்ற பெண்ணைதிருமணம் செய்து கொண்டார்.
3 அடி உயரமே உள்ள குள்ள கற்பகமும் சில சினிமாக்களில் நடித்துள்ளார். பேரழகன் படத்தில் கூன் முதுகுடைய சூர்யா பெண்பார்க்கப் போவார். அந்தப் பெண்ணாக, டி.பி.கஜேந்திரனின் மகளாக நடித்துள்ளார் கற்பகம்.
இவர்களுக்கு ஆனந்த், ரேகா ஆகிய குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் தனது மகள் ரேகாவின் பள்ளி சான்றிதழைவாங்க வெளியே சென்றார் ராஜா. ஆனால், திரும்பி வரவில்லை. இதையடுத்து தன்னைக் கைவிட்டு விட்டு கணவர்தலைமறைவாகி விட்டதாக குள்ள கற்பகம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.