கொள்ளை, குண்டு புரளிகள்: திமுக மீது ஜெ. புகார்
சென்னை:
சட்டம், ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, வெடிகுண்டு புரளிகள்ஆகியவற்றை திமுகவினர் தான் மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில், தொடர் கொள்ளைகள் நடந்து வருகின்றன. புறநகர்ப் பகுதிகளில் கொலைகளும்அதிகரித்துள்ளன.
இந் நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார்கூறியுள்ளன. முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளன.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில், ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம் ஒழுங்கு நிலையைசீர்குலைக்கும் நோக்கத்துடன் திமுகவினரே கொள்ளை, வழிப்பறிகளில் ஈடுபட்டு வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெ. அறிக்கை விவரம்: தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைத்து, மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கும்வகையில், திமுகவினரும், அவர்களின் தலைவர் கருணாநிதியும் திட்டமிட்டு கொள்ளை, திருட்டு, வழிப்பறிகள், வெடிகுண்டுபுரளிகள் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் அரங்கேற்றி வருகிறார்கள்.
சமீபத்திய கொள்ளை, திருட்டு, வழிப்பறி, வெடிகுண்டு புரளி ஆகியவற்றில் திமுகவினருக்கு முக்கிய பங்கு உள்ளது காவல்துறைவிசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், சென்னையில் சமீபத்தில் ஒரே நாளில் பல்வேறு பள்ளிகளில் வெடிகுண்டு புரளிகள் கிளம்பியதன் பின்னணியிலும்திமுகவினர் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு புரளிகளினால் பல மாணவ, மாணவிகள் நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும்தான் பொறுப்ற்ேக வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தமிழக அரசு அதிகபட்ச முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. கும்பகோணம்பள்ளிக் கூட தீவிபத்திற்குக் காரணமான அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பாரபட்சம்பார்க்கப்பட மாட்டாது.
கும்பகோணம் சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே முழுமையான காரணமாகும்.அரசுக்குத் தவறான தகவல்களைத் தந்து அதன் மூலம் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கி அரசையும் ஏமாற்றியுள்ளனர்.
கடந்த 1997ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவிலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு 45 பேர் பலியாயினர். இதுதொடர்பான விசாரணைக்கமிஷன் அறிக்கை கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை திமுக ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டது.
கும்பகோணம் விபத்தைத் தவிர்த்திருக்கலாமே என்று இப்போது கருணாநிதிக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பெரிய கோவில் விஷயத்தில் கருணாநிதி நடந்து கொண்டது குறித்து வாய் திறக்காதது ஏன் என்றுகேள்வி எழுப்பியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications