தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு
சென்னை:
தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே மேற்கொள்வதால் முன்பை விட 10 சதவீத அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளதாகபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் மதுவிலக்குத் துறை மானியக் கோரிக்கையை அறிமுகப்படுத்தி அவர் பேசுகையில், தமிழகத்தில் அரசு மதுபானவிற்பனையை நேரடியாக மேற்கொள்ளஆரம்பித்த பின்னர் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது மதுபான விற்பனை மூலம்அரசுக்கு ரூ.212.25 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் முத்திரைத் தாள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், தனிச் சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுமகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் அந்த மாநிலங்களுக்கென தனி முத்திரைத் தாள்சட்டம் அமலில் உள்ளது. ஆனால்தமிழகத்தில் 1891ம் ஆண்டு இந்திய முத்திரைத்தாள் சட்டம்தான் அமலில் உள்ளது என்றார் பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications