கருணாநிதியை சபைக்கு அழைக்கும் பொன்னையன்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு நேரில் கருத்துக் கூற முன் வர வேண்டும் என்றுநிதியமைச்சரும், அவை முன்னவருமான பொன்னையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ட்டசபையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின் அவர் பேசுகையில், கருணாநிதி சட்டசபைக்கு வெளியே இருந்து கொண்டு அவைநடவடிக்கைகள் குறித்துக் கருத்துக் கூறுவதை தவிர்க்க வேண்டும். சட்டசபைக் கூட்டங்களில் அவர் பங்கேற்க வேண்டும். இங்குவந்து நேரில் கருத்துக் கூற முன் வர வேண்டும்.
பேரவையில் என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்பதை பேரவைக் குறிப்பேடுகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அதன் பின்கருத்துக் கூறுவதுதான் அவருக்கு நல்லது, சபையின் மாண்பும் அப்போதுதான் காப்பாற்றப்படும் என்றார்
பத்திரிக்கைகளுக்கு அட்வைஸ்:
கருணாநிதியின் அறிக்கைகளை முழுமையாகப் படித்துவிட்டு, உண்மை நிலையையும் பரிசீலித்து விட்டு அதன் பிறகு செய்தியாகவெளியிடுங்கள், காரணம் அவரது அறிக்கை முழுவதும் பொய்களால் ஆனவை என்று பத்திரிக்கையாளர்களுக்கும்பொன்னையன் "அறிவுரை" வழங்கினார்.
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்து பொன்னையன் பேசுகையில்,
கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதை சில பத்திரிக்கைகள் செய்தியாக பிரசுரித்துள்ளன. கருணாநிதியின் அறிக்கையும்,பேச்சுக்களும் முற்றிலும் பொய்களையே அடிப்படையாகக் கொண்டவை.
எனவே எதிர்காலத்தில் கருணாநிதியின் அறிக்கை, பேட்டி ஏதாவது இருந்தால் அவற்றை முழுமையாக பரிசீலித்து அதில்உள்ளவை உண்மையான தகவல்களா என்பதை அறிந்து கொண்ட பின்னர் செய்தியாக பிரசுரியுங்கள். கருணாநிதி சொல்வதைஎல்லாம் நம்பி விடாதீர்கள்.
கருணாநிதியின் பேச்சை பிரசுரித்த பத்திரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு விரும்பவில்லை. இனிமேல் அவர்கள்உண்மையான செய்திகளை மட்டுமே பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்று மறைமுகமாக எச்சரித்தார் பொன்னையன்.
சட்டசபையில் பொய்களை மட்டுமே பதிலாக சொல்பவர் நிதியமைச்சர் பொன்னையன் என திமுகவின் தலைமைநிலையச் செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications