இந்தியா இப்படி.. சீனா அப்படி...
பெய்ஜிங்:
தனது நாட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபரை அமெரிக்க அதிகாரிகள் தவறாக நடத்தியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளிடம் அமெரிக்கா அராஜகம் செய்ய ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ள சீன அரசு, இது குறித்து விசாரணை நடத்தி அமெரிக்க அதிகாரிகளைக் கண்டிக்க வேண்டும் என்றும் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் காலின் பாவலிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அமெரிக்கா சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸை டல்லஸ் விமான நிலையச்சில் கையை மேலே தூக்கச் சொல்லியும், ஷூக்களை கழற்றச் சொல்லியும், உடைகளைக் களைந்தும் கேவலப்படுத்தினர் அமெரிக்க அதிகாரிகள்.
அந்த விவகாரத்தை அப்போதைய பா.ஜ.க. அரசு வெளியில் மூச்சு காட்டவில்லை. அப்படியே மூடி மறைத்தது. இப்போது ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசும் அது தொடர்பாக அமெரிக்காவுக்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், தனது நாட்டைச் சேர்ந்த 37 வயது தொழிலதிபரான ஸோ யான் என்ற பெண்ணை கனடா நாட்டு எல்லையில் வைத்துத் தாக்கிய அமெரிக்க அதிகாரிகள் மீது சீனா கடுமையாக பாய்ச்சல் காட்டியுள்ளது.
நயாகரா நீர் வீழ்ச்சி அருகே அந்த சீனப் பெண் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் போதைப் பொருள் சோதனை நடத்துவதாகக் கூறி அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அத்துமீறியுள்ளனர்.
இது குறித்து அறிந்தவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பாவலை தொடர்பு கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் லீ ஸாஸிங், அந்த அதிகாரிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சீன அரசு பத்திரிக்கையும் இச் சம்பவம் குறித்து எழுதியுள்ள தலையங்கத்தில் அமெரிக்காவை வறுத்து எடுத்துள்ளது. வளர்ந்து வரும் அமெரிக்க அராஜகத்தின் ஒரு பகுதிதான் இது என்று கூறியுள்ள, சீன அரசு, மனித உரிமைகளைப் பாதுகாக்க வந்த தேவ தூதனாக இனியும் அமெரிக்கா தன்னைத் தானே கூறிக் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.
மற்ற நாட்டினரின் உயிரை விட தங்களது உயிரும் மரியாதையும் மட்டுமே மிக உயர்வானது என அமெரிக்கா நினைக்கிறது. கற்பனையான காரணங்களுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்வார்கள், ஒரு பெண்ணைக் கூட அடித்து துன்புறுத்துவார்கள்.
தங்களது தவறான செயல்பாடுகளால், அமெரிக்க அதிகாரிகள், தங்கள் நாடு குறித்து கேவலமான கருத்தை உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறார்கள் என்று வாட்டி எடுத்துள்ளது..
இந்த விவகாரத்தை இந்தியா போல மெளமாக இல்லாமல், பூதகரமான பிரச்சனையாக்க சீனா முயல்வதால், தவறாக நடந்து கொண்ட கஸ்டம்ஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சீனாவிடம் உறுதியளித்துள்ளார் காலின் பாவல்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications