மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடு கிடு உயர்வு
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு சமீப வாரங்களாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து விட்டது. இந் நிலையில் ஆடிப் பெருக்குதிருவிழாவை முன்னிட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பு 75 அடியிலிருந்து 70அடியாகக் குறைந்தது.
நீர் இருப்பு தொடர்ந்து குறைந்தால் காவிரி பாசனப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்ற கவலையில் பொதுப்பணித்துறைஅதிகாரிகளும், விவசாயிகளும் இருந்து வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் கர்நாடகத்தில் கன மழை பெய்யத் தொடங்கியது. இந்த கன மழை காரணமாக கபினி அணையிலிருந்து அதிகதண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கன அடியிலிருந்து 12,678 கன அடியாகஅதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது 33 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இன்னும் 3 டிஎம்சி அளவுக்கு ஆடிப் பெருக்கு விழாவுக்கு தண்ணீர்திறந்துவிடப்பட வேண்டும். எனவே அடுத்த சில நாட்களில் அணையின் நீர் இருப்பு 30 டிஎம்சியாக குறையும். அதேசமயம், அணைக்குதொடர்ந்து நீர் வரத்து இருந்தால் இந்தக் குறைவை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தொடர் மழை காரணமாக அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீன் அளவு விநாடிக்கு 12,000 கன அடி நீர் என்ற அளவு தற்போது7,000 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications