இந்து, முரசொலி மீதான தண்டனைகள் வாபஸ்
சென்னை:
உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக இந்து, முரசொலி நாளிதழ்களின் ஆசிரியர்கள், நிருபர்களைக் கைது செய்யபிறப்பித்த உத்தரவை தமிழக சட்டமன்றம் இன்று வாபஸ் பெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி இந்து, முரசொலி பத்திரிக்கைகள் சட்டமன்ற உரிமையை மீறிவிட்டதாகக் கூறி அதன் இந்து ஆசிரியர் ராம்,பதிப்பாளர் பார்த்தசாரதி, நிருபர்கள் உள்ளிட்ட 5 பேரையும் முரசொலி ஆசிரியர் செல்வத்தையும் கைது செய்து 15 நாள் சிறையில்அடைக்க சபாநாயகர் காளிமுத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு தமிழக அரசுக்கு தேசிய அளவில் கண்டனம் எழுந்தது. இந்தக் கைது உத்தரவை எதிர்த்தும், தங்கள் மீது உரிமைப் பிரச்சனை கிளப்பசட்டமன்றக்குக்கு அதிகாரம் உண்டா என்று கேள்வி எழுப்பியும் இந்து ஆசிரியர் ராம், முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு அளித்திருக்கும் கருத்து சுந்திரத்தை சட்டமன்றத்தின் 194(3)வது பிரிவு பறிப்பதாக இந்து ராம் தனதுமனுவில் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டக் கேள்விகள் நிறைந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் விசாரணைக்குமாற்றுவதாக தலைமை நீதிபதி லஹோட்டி இரு தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இந் நிலையில் அவை முன்னவரும் நிதியமைச்சருமான பொன்னையன் இந்து, முரசொலி நாளிதழ்கள் மீதான தண்டனையை ரத்து செய்யும்தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தைக் கொண்டு வந்த பொன்னையன் பேசுகையில்,
மாநிலத்தின் நலனையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிக்கைகள் நடு நிலையுடன் சட்டமன்ற செய்திகளை வெளியிடவேண்டும். சட்ட மன்றத்தில் நடப்பதை அப்படியே எழுத வேண்டும். சொந்த விருப்பு, வெறுப்புளை செய்திகளில் சேர்க்கக் கூடாது.
தவறான செய்திகள் பிரசுரமாகக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காத் தான் சட்டமன்ற விதிமுறைகள் உள்ளன. அதை பத்திரிக்கைகள் பின்பற்ற வேண்டும். இனிமேல் இந்து உள்ளிட்ட நாளிதழ்களும் டிவிக்களும் நியாயமான முறையில் செய்திகளை வெளியிடும் என்றுநம்புகிறோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தொடர்பான தண்டனைகளை ரத்து செய்யும்தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார்.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications