இந்து, முரசொலி மீதான தண்டனைகள் வாபஸ்
சென்னை:
உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக இந்து, முரசொலி நாளிதழ்களின் ஆசிரியர்கள், நிருபர்களைக் கைது செய்யபிறப்பித்த உத்தரவை தமிழக சட்டமன்றம் இன்று வாபஸ் பெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி இந்து, முரசொலி பத்திரிக்கைகள் சட்டமன்ற உரிமையை மீறிவிட்டதாகக் கூறி அதன் இந்து ஆசிரியர் ராம்,பதிப்பாளர் பார்த்தசாரதி, நிருபர்கள் உள்ளிட்ட 5 பேரையும் முரசொலி ஆசிரியர் செல்வத்தையும் கைது செய்து 15 நாள் சிறையில்அடைக்க சபாநாயகர் காளிமுத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு தமிழக அரசுக்கு தேசிய அளவில் கண்டனம் எழுந்தது. இந்தக் கைது உத்தரவை எதிர்த்தும், தங்கள் மீது உரிமைப் பிரச்சனை கிளப்பசட்டமன்றக்குக்கு அதிகாரம் உண்டா என்று கேள்வி எழுப்பியும் இந்து ஆசிரியர் ராம், முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு அளித்திருக்கும் கருத்து சுந்திரத்தை சட்டமன்றத்தின் 194(3)வது பிரிவு பறிப்பதாக இந்து ராம் தனதுமனுவில் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டக் கேள்விகள் நிறைந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் விசாரணைக்குமாற்றுவதாக தலைமை நீதிபதி லஹோட்டி இரு தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இந் நிலையில் அவை முன்னவரும் நிதியமைச்சருமான பொன்னையன் இந்து, முரசொலி நாளிதழ்கள் மீதான தண்டனையை ரத்து செய்யும்தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தைக் கொண்டு வந்த பொன்னையன் பேசுகையில்,
மாநிலத்தின் நலனையும் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிக்கைகள் நடு நிலையுடன் சட்டமன்ற செய்திகளை வெளியிடவேண்டும். சட்ட மன்றத்தில் நடப்பதை அப்படியே எழுத வேண்டும். சொந்த விருப்பு, வெறுப்புளை செய்திகளில் சேர்க்கக் கூடாது.
தவறான செய்திகள் பிரசுரமாகக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காத் தான் சட்டமன்ற விதிமுறைகள் உள்ளன. அதை பத்திரிக்கைகள் பின்பற்ற வேண்டும். இனிமேல் இந்து உள்ளிட்ட நாளிதழ்களும் டிவிக்களும் நியாயமான முறையில் செய்திகளை வெளியிடும் என்றுநம்புகிறோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தொடர்பான தண்டனைகளை ரத்து செய்யும்தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications