சென்னையில் 200 குடிசைகள் எரிந்து சாம்பல்
திருவொற்றியூர்:
சென்னை புறநகர்ப் பகுதியான மணலியில் இன்று காலை ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 200 குடிசைகள் எரிந்துசாம்பலாயின.
மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில்சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் ரசாயன கழிவுகள் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது.
கால்வாய் வழியாக இந்த கழிவுகள் எண்ணூ
இந்த தீப்பொறி கால்வாய் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் விழுந்து 200 குடிசைகள் எரிக்கத் தொடங்கியது. தீவிபத்துக்கு காரணம் என்ன என்பது புரியாமல் குடிசையில் இருந்தவர்கள் வீதிக்கு ஓடிவந்தனர். காற்று அதிகமாகவீசியதால் தீ மேலும் கொளுந்துவிட்டு எரிந்து 5 தெருக்களில் சுமார் 200 வீடுகள் சாம்பலாயின.
பகல் நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து 10க்கும்மேற்பட்ட தீயணைப்பு துறை வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. கால்வாயில் மட்டும் பெட்ரோல், டீசல்ரசாயன கழிவு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications