இராக்: அத்வானி, அமைச்சர் ஆலோசனை
டெல்லி - குவைத்:
இராக் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற 3 இந்தியர்கள் உட்பட 7 பிணைக் கைதிகள் விரைவில்விடுவிக்கப்படுவார்கள் என்று அவர்களை வேலைக்கு அமர்த்திய குவைத் லாரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராணா அபு சைனே கூறுகையில், பிணைக்கைதிகளை விடுவிப்பதுதொடர்பான பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். விரைவில் அவர்கள்விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
அதே நேரத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்,யார், யார் மூலமாக பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதையும் கூற மறுத்து விட்டார்.
முன்னதாக துபாய் தொலைக்காட்சிக்கு சைனே அளித்த பேட்டியில், இராக் தீவிரவாதிகள் விதித்த நிபந்தனைகள்அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும், தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தையில் பாதியில் விலகிய அல்துலாய்மியை மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துமாறு கேட்டுக் கொள்ள ஒரு பிரமுகர் பாக்தாத்துக்குஅனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் வேறு சில மத்தியஸ்தர்கள் மூலமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந் நிலையில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியை வெளியுறவுத்துறை இணையமைச்சர்அஹமத் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். பிணைக் கைதிகள் விவகாரம், அதை அரசு கையாண்டுமுறை குறித்து மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் அத்வானியிடம் அஹமத்விளக்கினார்.
அத்வானியில் இல்லத்தில் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேச அஹமத்மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications