குடந்தை சோகம்: ஒலிநாடாவில் கருணாநிதியின் கவிதாஞ்சலி
சென்னை:
கும்பகோணம் சோகம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதை, இசை வடிவில் ஒலிநாடாக்களாகவும்,சி.டிக்களாகவும் வெளியிடப்படவுள்ளது. இவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை கும்பகோணம்தீவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு வழங்கப் போவதாக கருணாநதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா மறைவுக்குப் பிறகு இரங்கல்கவிதைகளை நான் படைக்கவில்லை. இதுவரை இருமுறை மட்டுமே இரங்கல் கவிதைகளைப் படைத்துள்ளேன்.
ஆனால் சமீபத்தில் நடந்தேறிய கும்பகோணம் தீவிபத்து சம்பவத்தில் இறந்த குழந்தைகளுக்காக கவிதாஞ்சலியைநான் படைத்தேன். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மொழிபெயர்ப்பைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் அந்தக் கவிதையை பாராட்டினார்கள்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் விருப்பப்படி இந்த கவிதை இசை வடிவில் உருவாக்கப்பட்டு ஒலி நாடாக்களாகவும்,சி.டிக்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத் தொகையை கும்பகோணம்தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு திமுக அறக்கட்டளை மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications