மேட்டூர்: ஜ.மு.கூ. மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்ததால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றுதிமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் 72 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தும், அணையைத் திறந்து விடாத தமிழக அரசைக்கண்டித்து நாளை ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் மறியல்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதனையடுத்து கருணாநிதி , ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் கலந்துபேசி போராட்டத்தை ஒத்திப் போடுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications