மேட்டூர் திறப்பு: காவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணையிலிருந்து வரும் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைகாவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சம்பந்தம்,
மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல்சாகுபடிக்குத் தேவையான கடனை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
நாகை மாவட்ட பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை 15-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என நாகை ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகளை ஏற்று முன்னதாகவே அணையைத் திறக்கமுதல்வர் உத்தரவிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications