For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்வாகத் தீர்ப்பாயம்: தமிழக அரசுக்கு எதிராக வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நிர்வாகத் தீர்ப்பாயத்தை கலைப்பது என்ற தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது நிர்வாகத் தீர்ப்பாயத்தை கலைக்கும் அரசின்கொள்கை முடிவுக் குறிப்பு அவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தொழிலாளர் பிரச்சினைகளைக் கவனிக்க தற்போது தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய 3அமைப்புக்கள் உள்ளன. இனி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரு அமைப்புக்கள் மட்டுமேபோதுமானது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந் நிலையில் தமிழக அரசின்முடிவை எதிர்த்து சென்னை சர்வீஸ் பார் அசோசியேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முன்பு சுமார் 30,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிர்வாகத் தீர்ப்பாயம்கலைக்கப்பட்டால் அந்த வழக்குகள் நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதனால்விரைவில் நிவாரணம் கிடைக்காது.

அரசு ஊழியர் பணிநீக்க விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டெஸ்மா சட்டத்தின் அதிகாரம்குறித்த மனுக்களை நீர்வாகத் தீர்ப்பாயம்தான் விசாரிக்க முடியும். தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள இடங்களைநிரப்புவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், அரசு தனது உறுதிமொழியில் இருந்துபின்வாங்கி தற்போது தீர்ப்பாயத்தையே ஒழிக்க முடிவெடுத்துவிட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இருக்கும்போது, மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தஉரிமை மறுக்கப்படுவது பாரபட்சமான நடவடிக்கையாகும்.

எனவே, மாநிலத் தீர்ப்பாயத்தை ஒழிக்கும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அதில் காலியாகஉள்ள இடங்களை உடனே நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, வழக்கறிஞர் நந்தகுமார் கோரிக்கைவிடுத்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான பெஞ்ச், இதேபோன்ற ஒரு வழக்கை விசாரித்து வருவதாகவும், அந்தபெஞ்ச் முன்னிலையில் கோரிக்கை வைக்குமாறு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான பெஞ்ச்அறிவுறுத்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X