அமைச்சரவைக் கூட்டம்: பொடா ரத்தாகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொடா சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்வது குறித்து இன்று மத்தியஅமைச்சரவை கூடி விவாதிக்கிறது.

மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையில் இக் கூட்டம் நடக்கிறது. அடுத்த வாரம்கூடும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொடா ரத்து மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதே நேரத்தில் இப்போதுள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களை கடுமையாக்கவும்,தீவிரவாதத்துகுக்கு நிதியுதவி செய்வோரை கடுமையாக தண்டிக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொடா சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யாவிட்டாலும் அக்டோபருடன் அந்தச்சட்டத்தின் ஆயுட் காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெவுக்கு வேறு வழியில்லை- கருணாநிதி

பொடா சட்டம் வாபஸ் பெறப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்திட்டவட்டமாக அறிவித்ததால் தான் வேறு வழியில்லாமல் வைகோ மீதான வழக்கை முதல்வர்ஜெயலலிதா வாபஸ் பெற்றுள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வைகோ மீதான பொடா வழக்கு வாபஸ் குறித்து அவர் கூறியதாவது:

பொடாவை கட்டி அழுத ஜெயலலிதா, இதை வைத்து பல கொடுமைகளை அரங்கேற்றினார். அதற்குஎன்னென்னவோ நியாயம் கற்பித்துப் பார்த்தார். ஆனால், அவரது வாதங்கள் எங்கும்செல்லுபடியாகவில்லை.

இந் நிலையில் பொடாவை நீக்குவோம் என நேற்று மத்திய அமைச்சர் பாட்டீல் திட்டவட்டமாகக்கூறிவிட்டார்.

இதையடுத்து வைகோ மற்றும் மதிமுகவினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறஉத்தரவிட்டிருக்கிறார். வைகோவும் அந்த 8 பேரும் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கொடுமைஅனுபவித்தார்களே, அதற்கு இந்த ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று கேட்டார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+