மணல் லாரி உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
சென்னை:
சென்னை உள்பட பல மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தை தூண்டும் மணல் லாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மணல் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மணல் விநியோகம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துச் செயலாளர் பி.சண்முகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அரசு மணல்கிடங்குகளில் தாராளமாக மணல் கிடைக்கிறது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மணலை வாங்கிக் கொள்ளலாம்.
மணல் எடுத்து வரும் லாரிகளையோ, அல்லது மணல் ஏற்றச் செல்லும் லாரிகளையோ யாராவது தடுத்தால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மணல் அள்ளும் உரிமையை தனியார்களிடமிருந்து பறித்துள்ள தமிழக அரசு தற்போது ஆறுமுகச்சாமி என்பவருக்கு மட்டும்மணல் அள்ள உரிமை அளித்திருப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடக்கிறது.