மின்னணு வாக்குப்பதிவு : ஜெ.க்கு தேர்தல் ஆணையம் பதில்
டெல்லி:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லை என்று மாநிலங்களவை அதிமுக உறுபிப்பினரும்,வழக்கறிஞருமான ஜோதிக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட குளறுபடிகள் காரணமாகவே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகதோற்றது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதற்குப் பதிலளித்து தேர்தல் ஆணையம் வழக்கறிஞர் ஜோதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்,
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி எந்த ஒரு முறைகேட்டையும் செய்ய முடியாது. அவ்வாறு முறைகேடு நடந்ததாகஅதிமுக அரசு கூறுமேயானால், அதை தேர்தல் ஆணையத்தின் முன்பு நிரூபிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலோ அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலோ இந்த சோதனையை நடத்த தேர்தல் ஆணையம் தயார்.
அவ்வாறு முறைகேடுகள் நடந்திருக்குமேயானால், அவை தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்களாக இருக்க முடியாது.
இந்த விவகாரம் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் ஜா கருத்துத் தெரிவித்தது சரிதான். செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் தேர்தல்ஆணையம் தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் செய்தியாளர்களிடம் பதில் கூற அவருக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.