மணல் லாரி ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
தமிழகத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே நடத்தி வரும் நிலையில், ஆறுமுகச்சாமி என்ற தனியாருக்கு மட்டும் மணல்அள்ளும் உரிமையை சமீபத்தில் தமிழக அரசு வழங்கியது.
இதனால் கோபமடைந்த மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2நாட்களாக நடந்து வந்த போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தினார்.பேச்சுவார்த்தையின் இறுதியில் உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ்செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, மணல் குவாரிகளை முழுமையான அளவில் அரசே ஏற்று நடத்துவது, ஒரு லாரி லோடுக்கு 2 யூனிட்மணலை மட்டுமே அனுமதிப்பது, அரசு அதிகாரிகள் தவறு செய்வதைத் தடுக்க கண்காணிப்புக் குழுவைஅமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து எங்களது போராட்டத்தை நள்ளிரவு முதல் விலக்கிக் கொண்டுள்ளோம் என்றார் யுவராஜ்.