வேலூர்: லாரி-வேன் மோதலில் 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் அருகே லாரி, வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த 8 பேரும் சம்பவஇடத்திலேயே பலியானார்கள்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி வேனில் 8 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். வேலூரில்இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரையான்காடு என்ற இடத்துக்கு எதிரே வேன் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது.

மோதிய வேகத்தில் ஆம்னி வேன் அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த டிரைவர் உள்பட 8பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.

இதில் ஒருவர் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் என்பது அவரது அடையாள அட்டை மூலம் தெரிய வந்தது.விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பலியான 8 பேர் உடல்களையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனில் இருந்த 8பேருமே பலியாகி விட்டதால் அவர்களைப் பற்றிய விவரம் தெரிய வரவில்லை. போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லாரி வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+