புதிய தமிழ்ப் படங்களுக்கு கர்நாடகத்தில் தடை
பெங்களூர்:
கன்னடத் திரையுலகினரின் தடை காரணமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட புதிய படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பிற மொழிப் படங்களை அவை ரிலீஸ் செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குப் பிறகே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்று கன்னடத்திரையுலகினர் கோரி வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், பிற மொழிப் படங்களை திரையிடவே கூடாது என்றுஅம் மாநில திரையரங்களுக்கு கன்னடத் திரையுலகினர் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடை காரணமாக கமல்ஹாசனின் "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்", விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "க்யூன், ஹோகயா நா",வில் ஸ்மித் நடித்துள்ள "ஐ ரோபோட்" ஆகிய மூன்று படங்களும் திரையிடப்பட மாட்டாது என்று திரையரங்கு உரிமையாளர்கள்அறிவித்துள்ளனர்.
மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு கன்னடம் தவிர பிற மொழிப் படங்கள் எதுவும் கர்நாடக திரையரங்குகளில் திரையிடப்படாது என்றும்கன்னடத் திரையுலகினர் அறிவித்துள்ளனர்.
இந்தத் தடை தமிழப் படங்களைக் குறி வைத்தே கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications