For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய கொடியை அவமதித்த வெங்கையா நாயுடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாஜக கொடிக் கம்பத்தில், தேசியக் கொடியை ஏற்றி தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக அக் கட்சியின்தலைவர் வெங்கையா நாயுடு மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு நேற்று சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தேசியக் கொடிஏற்றினார். உச்சியில் பா.ஜ.கவின் தாமரைச் சின்னம் கொண்ட, பா.ஜ.க கொடியின் வர்ணம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை நாயுடு ஏற்றினார்.

இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திரபோஸ், பரணீதரன் ஆகிய இரு இளைஞர்கள் புகார்கொடுத்துள்ளனர். அதில், பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில், பாஜக வண்ணம்பூசப்பட்ட கொடிக் கம்பத்தில், தேசியக் கொடியை ஏற்றியுள்ளார் வெங்கையா நாயுடு.

மேலும் கொடியின் உச்சியில் தாமரைச் சின்னமும் உள்ளது. ஏற்கனவே பறந்து கொண்டிருந்த பாஜக கட்சிக்கொடியை கழற்றி விட்டு அதற்குப் பதில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். இது தேசியக் கொடியைஅவமதிக்கும் செயல், குற்றச் செயல். இதற்கான ஆதாரமாக வீடியோ பதிவு வைத்துள்ளோம்.

எனவே வெங்கையா நாயுடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் இரு இளைஞர்களும்கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக புகாரைப் பதிவு செய்துள்ள மாம்பலம் போலீஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து விட்டுமேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X