கும்பகோணம்: மேலும் 2 குழந்தைகள் டிஸ்சார்ஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோண தீ விபத்தில் படுகாயமடைந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2குழந்தைகள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த கொடூரமான தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தன.மேலும் பல குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கெளசல்யா, விஜய் என்ற இருவரும் சிறப்பு சிகிச்சைக்காகசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சையில்குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இக் குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்கள் தலைமை செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்தனர். சிகிச்சை அளிக்க உதவியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications