லண்டன் செல்ல போலி ஆவணங்கள்: மூவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் போலியான ஆவணங்கள், மோசடி செய்யப்பட்டடி.டி. ஆகியவற்றைக் கொடுத்து லண்டன் செல்வதற்காக விசா பெற முயன்ற 3 வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இங்கிலாந்து செல்ல விசா கோரி டிப்ளமோ படித்த அருண் குமார் (25), மதியழகன் (25),பட்டதாரியான கயூம் கான் (34) ஆகிய மூவரும் விண்ணப்பித்திருந்தனர்.

இதையடுத்து மூவரிடமும் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர்.அப்போது மூவரும் லண்டனில் உயர் கல்வி பயிலுவதற்கான ஆவணங்களையும், ரூ. 3.25 லட்சம்மதிப்புள்ள 3 டி.டிக்களையும் சமர்ப்பித்தனர்.

ஆனால், அவற்றை தூதரக அதிகாரிகள் சோதனையிட்டபோது அவை போலியானவை என்றுதெரியவந்தது.

ரூ. 30 க்கு எடுக்கப்பட்ட மூன்று வங்கி டி.டிக்களையும் அவர்கள் ரூ. 3.25 லட்சமாகத்திருத்தியுள்ளனர். இதையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் தூதரகம் புகார் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து அந்த மூன்று வாலிபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீதுபோலி ஆவணங்கள் தாக்கல் செய்தல், மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மெட்ரோபாலிட்டன் நீதிபதி முன் மூவரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள்நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+