அதிக சக்தி வாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தகவல் தொடர்புக்கு உதவும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் அதிக திறன் கொண்டஜி.எஸ்.எல்.வி.- எம்கே3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவெற்றிகரமாக வடிவமைத்துள்ளது.
4 டன் எடையுள்ள செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது இந்த ராக்கெட்.ஏற்கனவே இந்தியா தயாரித்துள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் திறனை மேலும் அதிகரித்து இந்தபுதிய ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அதிக திறன் வாய்ந்த ராக்கெட் 2007-08ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோதலைவர் மாதவன் நாயர் பெங்களூரில் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications