பெங்களூர் விசாரணைக்கு தடை கோருகிறார் ஜெ
சென்னை:
காவிரி, வீரப்பன் விவகாரங்களால் கர்நாடகத்தில் தனக்கு எதிரான சூழல் நிலவுவதாகவும், இதனால் தன் மீதானசொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரில் நடத்தினால் நியாயம் கிடைக்காது என்றும் முதல்வர்ஜெயலலிதா மீண்டும் கூறியுள்ளார்.
இதனால் பெங்களூரில் இந்த வழக்கு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒருமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்துக்குள்கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந் நிலையில் காவிரி விவகாரத்தால் கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிரான சூழல் நிலவுவதாகவும், குறிப்பாகதனக்கு எதிரான நிலைமை இருப்பதாகவும், இதனால் வழக்கு விசாரணையை பெங்களூரில் நடத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதே போன்ற கோரிக்கையுடன் ஏற்கனவே இரு முறை உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல்செய்திருந்தார். அதில் வழக்கு விசாரணையை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால்,அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கை கர்நாடகத்தில் நடத்த தடை கோரி மனு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications