மகாராஷ்டிர சட்டசபை: அக்டோபர் 13ல் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மகாராஷ்டிரத்தில் வரும் அக்டோபர் 13ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் அக்டோபர் 7ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த இரு மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் ஆயுட் காலம் முடிவதையொட்டி தேர்தல் தேதிகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் மற்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்ற.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர இக் கட்சிகள் முடிவு செய்து இடப் பகிர்வு குறித்தபேச்சுவார்த்தைகளை இன்று ஆரம்பித்தன. அதே போல பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும்இன்று தொடங்கின.












Click it and Unblock the Notifications