சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஜெயலட்சுமி
மதுரை:
தன்னை போலீஸ் அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து செக்ஸ்ரீதியில் துன்புறுத்தியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஜெகஜால ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்
மதுரை உயர் நீதிமன்றத்தில் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த 30 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை வாக்குமூலமாக அளித்தார் ஜெயலட்சுமி. அதில் ஏட்டையாவில் ஆரம்பித்து டிஎஸ்பிக்கள் வரையிலான போலீசார், அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தன் வாழ்க்கையை சின்னாபின்னாவாக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தனக்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வாங்கித் தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு சென்ற போலீசார், செக்ஸ் தொல்லைகளால் சித்திரவதை செய்தனர். இதையடுத்து அவர்களது லஞ்சப் பணத்தை முதலீடு செய்ய என்னைப் பயன்படுத்தினர்.
கடைசியில் என்னை அடைவதில் இரு இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான் பண விவகாரமாக வெடித்து, இறுதியில் என்னைக் கடத்திச் செல்லும் அளவுக்குப் போனது என்று கூறியுள்ளார் ஜெயலட்சுமி.
ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் கூறுகையில், ஜெயலட்சுமிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளதாகக் கூறியுள்ளார்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications