லாரிகள் வேலை நிறுத்தம்: உயர்கிறது விலைவாசி
சென்னை & டெல்லி:
நாடு தழுவிய அளவில் நடக்கும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்றோடு நான்காவது நாளை எட்டியுள்ளது.
சுமார் 30 லட்சம் லாரிகள் இயங்காததால் அத்தியாவசிப் பொருட்களின் சப்ளை பல பகுதிகளில்பாதிக்கப்பட்டுள்ளதோடு, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர ஆரம்பித்துள்ளன. மேலும் ரேசன்கடைகளுக்கு உணவு தானியங்கள் உள்ளிட்ட சரக்குகள் கொண்டு செல்லப்படுவது நாடு முழுவதும்பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் லாரிகள் சர்வீசுக்கு 10 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தப் போராட்டம்நடக்கிறது.
வெளி மாநிலங்களுக்கு பொருட்களை அனுப்புவதும், வெளி மாநில லாரிகள் வருவதும் அடியோடுநின்றுபோய்விட்டதால், தமிழகத்தில் லாரி புக்கிங் அலுவலகங்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பால், காய்கறிகளின் சப்ளை பாதிக்கப்படாத வகையில் தான் இந்தப் போராட்டம் நடப்பதாகவும், மத்திய அரசுவளைந்து கொடுக்காவிட்டால் 2 நாட்களில் இந்தப் பொருள்களின் போக்குவரத்தையும் நிறுத்திவிடுவோம் என்றும்அகில இந்திய லாரி மோட்டார் காங்கிரஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
சென்னை, தூத்துக்குடி உள்பட நாட்டின் அனைத்து துறைமுகங்களிலும் பணிகள் அடியோடு ஸ்தம்பித்துப்போயுள்ளன. துறைமுகங்களில் ஏகப்பட்ட சரக்குகள் தேங்கிக் கிடப்பதால், கரை சேர்ந்த பல கப்பல்களில் இருந்தும்பொருட்களை இறக்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கச்சாப் பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளிலும் பணிகள்நின்றுபோய்விட்டன.
இந்தப் போராட்டத்தால் சராசரியாக நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
மத்திய வருவாய்த்துறைச் செயலாளருடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய இரு சுற்றுப் பேச்சும் தோல்விஅடைந்துவிட்டது. இதையடுத்து இனி நிதித்துறைச் செயலாளர் அல்லது நிதியமைச்சருடன் தான் பேச்சுநடத்துவோம் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தால் நாட்டின் பண வீக்க விகிதம் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுஏப்ரலில் 9 நாள் நடந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சி 1.1 சதவீதம்சரிந்து பெரும் இழப்பு ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications