16 நாட்டு இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை
டெல்லி:
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் (People of Indian Orgin) இந்திய குடியுரிமை பெற 275அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பா.ஜ.க ஆட்சியில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான விதிகள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி வெளிநாட்டு பிரஜைகளாகிவிட்டவர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோர் இந்தியக்குடியுரிமையையும் பெறும் வகையில் அரசியல் சட்டத்தின் குடியுரிமை விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து,நியூசிலாந்து, போர்சுகல், சைப்ரஸ், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 16நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.
இந்தக் குடியுரிமை பெற்றவர்கள், இந்தியர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற முடியும். ஆனால்,அரசுப் பணியோ, அரசியல் பதவிகளோ வகிக்க முடியாது. அதே போல தேர்தலில் வாக்களிக்கவும் முடியாது.












Click it and Unblock the Notifications