அதிமுக கவுன்சிலர் கொலையில் பாமக எம்எல்ஏ
கடலூர்:
பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கடலூரில் பஞ்சாயத்து கவுன்சிலர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பாமக எம்.எல்.ஏ வேல் முருகன் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வெங்கடேசன் (42) என்ற அந்த கவுன்சிலரின் வீட்டுக்கு இரவில் சென்ற ஒரு கும்பல் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து அவரைத் தாக்கியது.
இதையடுத்து அவர் தப்பியோடினார். அவரை ரோட்டில் விரட்டிச் சென்ற கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டுத்தப்பியது.
இந்தக் கொலைக்கு பண்ருட்டி பா.ம.க. எம்எல்ஏ வேல்முருகன், அவரது அண்ணன் திருமால்வளவன், தம்பிகண்ணன் ஆகியோர் தான் காரணம் என்று புகார் தரப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மூவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து இவர்களைக் கைது செய்ய தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையால் கடலூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்குபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications