வைகோ: பொடா வாபஸ் மனு மீது 1ம் தேதி தீர்ப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தாக்கல் செய்தமனுவின் மீது வரும் செப்டம்பர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக அன்றைய தினம் பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வைகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வைகோ தவிர அவருடன் பொடாவில் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர்களான கணேசமூர்த்தி, வீர இளவரசன்,புலவர் செவ்வந்தியப்பன், பூமிநாதன், அழகு சுந்தரம், மணியம், நாகராஜன், கணேசன் ஆகியோர் மீதானவழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கு இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. அப்போது அரசு தாக்கல் செய்த பொடா வழக்கு வாபஸ் மனு மீதான தீர்ப்பு செப்டம்பர் 1ம் தேதிவழங்கப்படும். அப்போது வைகோவும் மற்ற 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றார்.
வைகோ இப்போது தனது மறுமலர்ச்சி நடை பயணத்தில் உள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி ஒருநாள் சென்னைவந்துவிட்டு நடை பயணத்தை அவர் தொடர்வாரா அல்லது தனக்குப் பதிலாக வழக்கறிஞர்களை ஆஜராகச்சொல்வாரா என்று தெரியவில்லை.