பிரதமருக்கு காய்ச்சல்: சென்னை வருகை ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இன்றிரவு சென்னை வரவிருந்த அவரதுபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் அதிவேக அணு உலை கட்டுமானப் பணியை தொடங்கி வைக்க மன்மோகன் சிங் இன்றிரவு 9.30மணிக்கு சென்னை வர இருந்தார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு, நாளை காலை கல்பாக்கம் செல்லஇருந்தார். ஆளுநர் மாளிகையில், முதல்வர் ஜெயலலிதா அவரை சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.

அதே போல கல்பாக்கம் செல்லும் முன் நாளை காலை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப்பேசவும் முடிவு செய்திருந்தார். அப்போது பிரதமருக்கு விருந்தளிக்கவும் கருணாநிதி திட்டமிட்டிருந்தார்.

பிரதமராக பதவியேற்ற பின் மன்மோகன் சிங் முதன் முறையாக தமிழகம் வர இருந்ததால் காங்கிரஸ் கட்சியினரும்தடபுடல் ஏற்பாடுகளில் இறங்கினர்.

இந் நிலையில் வைரஸ் காய்ச்சலால் மன்மோகன் சிங் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இரு நாட்கள் அவர் முழுஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இரு நாட்களுக்கு அவரதுஅனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில் சென்னை பயணமும் அடக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+