அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Subscribe to Oneindia Tamil

பாலாசூர்:

2,500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-2 ஏவுகணை இன்று மீண்டும் வெற்றிகரமாக ஏவப்பட்டபரிசோதிக்கப்பட்டது.

ஒரிஸ்ஸாவில் உள்ள பாலாசூர் வீலர்ஸ் தீவு ஏவுகணைத் தளத்தில் இருந்து இன்று பகல் 12.55மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது. நடமாடும் லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணைசெலுத்தப்பட்டது.

இந்தச் சோதனையை பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சருக்கானஅறிவியல் ஆலோசகர் ஆத்ரே, அக்னி திட்ட இயக்குனர் அகர்வால் மற்றும் நூறுக்கும் அதிகமானஏவுகணை விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.

1,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில்சேர்க்கப்பட்டுவிட்டது. இதன் தாக்குதல் திறனை அதிகரித்து அக்னி-2 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 1,000 கிலோ எடையுள்ள குண்டு, அணுகுண்டுடன் 2,500 கி.மீ. தூரம் வரை சென்றுதாக்கும் திறன் கொண்டது. இன்று நடத்தப்பட்ட இதன் மூன்றாவது சோதனையும்வெற்றியடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+