தினத்தந்தி அதிபருக்கு டாக்டர் பட்டம்
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தினத் தந்தி பத்திரிக்கை அதிபர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
பத்திரிக்கைத்துறையிலும், விளையாட்டுத் துறையிலும், கிராமப் புற மாணவர்களின் கல்வி, மனிதநேயம் மற்றும் அவரது கொடைத் தன்மையை அங்கீகரித்து இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி தவிர மாலை மலர் உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கைகளின் அதிபராக மட்டுமின்றி,விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஆதித்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் உள்ளிட்ட பல விளையாட்டு அமைப்புகளின் முக்கியபொறுப்புகளை வகித்தவர். அவரது பல்துறை சேவைகளைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம்வழங்கப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்ராம்மோகன் ராவ், பா. சிவந்தி ஆதித்தனுக்கு இந்த பட்டத்தை வழங்கினார்.












Click it and Unblock the Notifications