ஆயுத இறக்குமதி: 4வது இடத்தில் இந்தியா
வாஷிங்டன்:
ஆசியாவிலேயே மிகப் பெரும் அளவில் ஆயுதங்கள் குவிக்கும் நாடுகள் வரிசையில் இந்தியாநாலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சீனா, இந்தியா, பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி வளைகுடா நாடுகளைத் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது. அதே நேரத்தில் உலகளவில் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் மூன்றாவதுஆண்டாக தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது.
2002ம் ஆண்டில் உலகளவில் 29.14 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத விற்பனை நடந்தது.2003ல் இது 12 சதவீதம் குறைந்து 25.6 பில்லியன் டாலராகியது. இந்த ஆண்டு இந்த விற்பனைமேலும் குறைந்துள்ளது.
கங்கிரசனல் ரிசர்ச் குரூப் என்ற சர்வதேச பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்ள்ளன. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வளர்ச்சியடைந்த நாடுகள் புதிய ஆயுதங்கள் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, இருக்கும்ஆயுதங்களை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் ஆரம்பித்துவிட்டன. மேலும் பல நாடுகள்ஆயுதங்கள் மீதான செலவைக் கட்டுப்படுத்தி விட்டன. சில வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும்பொருளாதார மந்தம் காரணமாக ஆயுதங்களில் செலவிட பணமில்லை.
ஆனால், வழக்கம்போல் வளரும் நாடுகள் ஆயுதக் குவிப்பை நிறுத்தவில்லை.
ஆயுத விற்பனையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.கடந்த ஆண்டில் அமெரிக்கா 14.5 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்துள்ளது.ரஷ்யா 4.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்துளளது.
மூன்றாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. இந்த நாடு 1.4 பில்லியன் டாலர் ஆயுதங்களை ஏற்றுமதிசெய்துள்ளது.
வளரும் நாடுகளைப் பொறுத்தவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடந்த 7 ஆண்டுகளில் 15.7பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. சீனா 13.7 பில்லியனுக்கும், எகிப்து13.6 பில்லியனுக்கும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளன.
12.6 பில்லியனுக்கு ஆயுதங்கள் வாங்கி இந்தியா நாலாவது இடத்திலும், 3.8 பில்லியன் மதிப்புள்ளஆயுதங்களை இறக்குமதி செய்து பாகிஸ்தான் 10வது இடத்திலும் உள்ளன.












Click it and Unblock the Notifications