இராக்: 3 இந்திய பிணை கைதிகள் விடுதலை
துபாய்:
இராக்கில் தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருந்த 3 இந்தியர்களும்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத் தகவலை முதலில் அல்-அரேபியா தொலைக் காட்சி தெரிவித்தது. பின்னர் வெளியுறவுத்துறைஅமைச்சர் நட்வர் சிங்கும் இத் தகவலை உறுதி செய்தார். அவர்கள் இராக்கில் உள்ள இந்தியத்தூதரகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
குவைத் வழியாக அவர்கள் இந்தியா அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்தியர்களோடு பிடித்துச் செல்லப்பட்ட 3 கென்யர்களும், ஒரு எகிப்திய லாரி டிரைவரும்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இராக்கில் லாரி ஓட்டிச் சென்ற அந்தர்யாமி, திலக்ராஜ், சுக்தேவ் சிங் ஆகிய மூன்று இந்தியடிரைவர்களையும் மூன்று கென்யர்களையும் ஒரு எகிப்தியரையும் தீவிரவாதிகள் கடந்த ஜூலை 21ம்தேதி கடத்திச் சென்றனர்.
இதையடுத்து குவைத் கல்ப் போக்குவரத்து நிறுவனமும் மத்திய அரசும் தீவிரவாதிகள் அமர்த்தியமத்தியஸ்தரான துலாய்மி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனால், பண பேரம் காரணமாக பேச்சுவார்த்தையில் உடனடி முன்னேற்றம் ஏற்படவில்லை.இதையடுத்து பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்ட அந்த நிறுவனம், நேரடியாகவோஅல்லது துலாய்மி தவிர்த்த வேறு தூதர் மூலமோ தான் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவோம் என்றுகூறிவிட்டது.
இந் நிலையில் இராக்கில் இருந்து அந்த லாரி நிறுவனம் வெளியேற வேண்டும், அமெரிக்கப்படைகளுக்கு உணவு சப்ளையில் இந் நிறுவன லாரிகள் ஈடுபடக் கூடாது, இந்த நிபந்தனையைஏற்றால் கடத்தப்பட்ட 7 பேரையும் உடனே விடுவிப்போம் என தீவிரவாதிகள் அறிவித்தனர்.
இதை குவைத் நிறுவனம் ஏற்றுக் கொண்டு இராக்கில் இருந்து தனது லாரிகள் அனைத்தையும் திரும்பஅழைத்தது. இந் நிலையில் 3 இந்தியர்களும், 3 கென்யர்களும், ஒரு எகிப்தியரும்விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்களை இராக்கிய தீவிரவாதிகள் நேற்று கொலை செய்ததால்அந் நாட்டில் பெரும் கலவரம் நடந்து வரும் நிலையில், இந்தியர்கள் இன்றுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஒரு முறை3 இந்தியர்கள் உள்பட 7 பேரும் விடுவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகிபின்னர் அது தவறானது நினைவுகூறத்தக்கது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications