மாலத்தீவு சிறையில் வாடும் தமிழர்
சென்னை:
மாலத் தீவு சிறையில் வாடிக் கொண்டிருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் தன்னைக் காப்பாற்றநடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வலுக்கன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். மாலத்தீவில் வேலை பார்த்து வந்த இவர் கற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தான் குற்றமற்றவன், அப்பாவி, பொய்யான புகாரின் பேரில் தன்னை சிறையில் அடைத்துள்ளார்கள் என்று கூறிகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு தனது உறவினர் எமில் ஜெபசிங் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் ராஜன்.
இக் கடிதத்தை கலாமுக்கு அனுப்ப உதவிய திண்டுக்கல்லைச் சேர்ந்த அமைதி அறக்கட்டளை தலைவர் பால் பாஸ்கர்கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக ராஜன் சிறையில் வாடி வருகிறார். இவருடன் சேர்த்து தமிழகத்தைச் சேர்ந்தகமல், சரவணன் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர்.
இதில் சரவணன் சிறை அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டு விட்டார். தற்போது ராஜனும், கமலும் சிறையில்வாடி வருகிறார்கள். இவர்களை மீட்காவிட்டால் சரவணனுக்கு நேர்ந்த கதிதான் இருவருக்கும் ஏற்படும்.
இருவரையும் பொய் வழக்கில் கைது செய்துள்ளனர் அந் நாட்டுப் போலீசார். அப்படியே குற்றம் செய்திருந்தாலும்முறைப்படி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தலாம். அதுவும் நடத்தப்படவில்லை. விசாரணையே இல்லாமல்சிறையில் வதைக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications