இராக் எதிரொலி: நேபாளத்தில் மசூதி எரிப்பு
காத்மாண்டு:
இராக்கில் தீவிரவாதிகளால் 12 நேபாள தொழிலாளர்கள் கொலை செய்ததையடுத்து நேபாளத்தில்பெரும் வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் ஜுமா மசூதி தீ வைத்துஎரிக்கப்பட்டது. மேலும் கத்தார் ஏர்லைன்ஸ் அலுவலம், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குஆட்களை அனுப்பும் தனியார் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஆகியவையும்சூறையாடப்பட்டன.
எரிக்கப்பட்ட இந்த மசூதி தான் நேபாளத்திலேயே மிகப் பெரிய பள்ளிவாசலாகும். இதையடுத்துமதக் கலவரம் நேராமல் தடுக்க, காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் இரங்கல் அனுஷ்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த 12 வாலிபர்கள் ஜோர்டனைச் சேர்ந்த மார்னிங் ஸ்டார் என்ற நிறுவனத்துக்காகஇராக்கில் பணியாற்றச் சென்றனர்.
ஆகஸ்ட் 19ம் தேதி இரு கார்களில் ஜோர்டனில் இருந்து இராக்குக்குள் நுழைந்த இவர்களைஅன்சர்-அல் சுன்னா என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
5 நாட்களுக்கு முன் இவர்களது வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள், நேபாள நாட்டினர்இராக்க்குக்கு வருவதை நேபாள் தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்கனவே இது போன்ற தடையை நேபாள் விதித்துள்ளது.
இந் நிலையில் அந்த 12 தொழிலாளர்களும் கொல்லப்பட்ட வீடியோவை தீவிரவாதிகள் நேற்றுவெளியிட்டனர்.
ஒருவரை தலையை வெட்டியும் மற்றவர்களையும் சுட்டும் கொன்றுள்ளனர் (முன்னதாக அனைவரும்தலையை வெட்டிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன).
அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், கொல்லப்பட்டு கிடப்பதையும் காட்டும் வீடியோவைதங்களது இணையத் தளத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து நேபாளத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் சாலைகளில்திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காத்மாண்டுவில் ஒரு பள்ளிவாசல்சூறையாடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஆங்காங்கே மோதலும் நடந்து வருகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications