Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இராக்: இந்தியர்களை மீட்க தரப்பட்ட ரூ 4.5 கோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சுமார் ரூ. 4.5 கோடியை பிணையத் தொகையாகக் கொடுத்துத் தான் 3 இந்தியர்கள் உள்ளிட்ட 7பேரையும் இராக்கிய தீவிரவாதிகளிடம் இருந்து குவைத் நிறுவனம் மீட்டுள்ளது.

இராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த இந்த 7 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இத குறித்துஇவர்களை வேலைக்கு அமர்த்தி இராக்குக்கு அனுப்பி குவைத் நிறுவன செய்தித் தொடர்பாளர்கூறுகையில்,

இவர்களை விடுவிக்க ரூ. 4.5 கோடியை தீவிரவாதிகளுக்கு வழங்கினோம். அதே நேரத்தில்இராக்கில் இருந்து எங்களது லாரிகளைத் திரும்பப்பெற வேண்டும் என்ற தீவிரவாதிகளின்கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.

பிணைத் தொகை நான்கு கட்டமாக தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டது. பணம் தரப்பட்ட விஷயம்இந்திய அரசுக்கும் தெரியும். இந்தப் பணத்தில் ஒரு பங்கு சமரசம் பேசிய தூதருக்கும்கொடுக்கப்பட்டது என்றார்.

இதற்கிடையே விடுவிக்கப்பட்ட 3 இந்தியர்களான அந்தர்யாமி, சுக்தேவ் சிங் மற்றும் திலக்ராஜ்ஆகியோர் குவைத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியாதிரும்புவர் என வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் தெரிவித்தார்.

பிரதமருக்கு கருணாநிதி பாராட்டு:

இந் நிலையில் 3 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுகதலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், இணை அமைச்சர் அகமது ஆகியோருக்குஅவர் இன்று அனுப்பிய வாழ்த்துத் தந்தியில், 3 மதிப்புமிக்க இந்திய உயிர்களை மீட்கஇடைவிடாமல் போராடிய தங்களுக்கு எனது நன்றிகள். மீட்பு முயற்சிகள் வெற்றிகரமாகமுடிந்ததற்குப் பாராட்டுக்கள் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+