ஜெ. சொத்து வழக்கு: ஆவணங்கள் சரிபார்ப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்கள் சில நாட்களில் பெங்களூர்செல்லப்படும் என்று தெரிகிறது. இந்த ஆவணங்களை சரி பார்த்து வாங்கும் பணியில் கர்நாடகசட்டத்துறை அதிகாரிகள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் வந்த கர்நாடக நீதிமன்றப் பதிவாளர் வெங்டேஷ்தலைமையிலான குழு சென்னையிலேயே முகாமிட்டு ஆவணங்களை சரி பார்த்து வாங்குப்பணியில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டுள்ளது.
2,451 ஆவணங்களும், நகைகள், பஸ் உள்பட 1,606 பொருட்களும் இந்த வழக்கில்சாட்சிகளாகவும் உள்ளன. இந்த ஆவணங்கள் தமிழில் உள்ளதால், தமிழ் தெரிந்த ஒருஅதிகாரியையும் பெங்களூரில் இருந்து கர்நாடகக் குழுவினர் அழைத்து வந்துள்ளனர்.
இந்த சரிபார்ப்புப் பணி ஓரிரு தினங்களில் முடிவடையும் என்றும் 3 வேன்களில் அவைபெங்களூருக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications