தனியார் துறையில் இட ஒதுக்கீடு: ராமதாஸ் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்துக்கு தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எந்த நாட்டிலும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை என்று தொழிலதிபர்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.இது தவறானது. 1965-ம் ஆண்டே அமெரிக்காவில் வேலையில் சமவாய்ப்பு அளிப்பதற்கான கமிஷன்நிறுவப்பட்டது.

இன, நிற வேறுபாடு இன்றி தொழில் தொடங்கி நடத்த அங்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒருகாலத்தில் இனத்தாலும், நிறத்தாலும் ஒதுக்கப்பட்டவர்கள் இப்போது தொழிலதிபர்களாக மாறியுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு தொழில்துறைக்கு வங்கிகள் மூலம் ரூ.6 லட்சம் கோடி கடன்வழங்கப்பட்டிருக்கிறது. இத் தொகையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது வெறும் ரூ.5,600 கோடிமட்டும்தான்.

இந் நிலையில் இந்தியா ஒளிர்வதாகவும், சமத்துவ சமுதாயம் அமைப்பதாகவும் பேசுகின்றோம். இக் கனவு நனவாகவேண்டுமானால் வேலையில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதற்குத் தொழில் அதிபர்கள்ஒத்துழைக்க வேண்டும்.

அவர்கள் ஒத்துழைக்காவிட்டாலும் தனியார் துறையில் இட ஒதுக்கீடுத் திட்டத்தை மத்திய அரசு துணிந்துநிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்குத் துணை நிற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+